Wednesday 26 March 2014

பீனிக்ஸ் பறவை – ஒரு தமிழ் சொல்

பீனிக்ஸ் பறவை கிரேக்க காவியத்தில் சொல்லப்பட்ட ஒரு இளஞ்சிவப்பு நிற கற்பனை பறவை. இப்பறவை எரிந்த சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்து வரும் என்று நம்பப்படுகிறது. வணிகர்கள் எனும் சொல் பணிகர்கள் என்று வங்காளத்தில் மருவியுள்ளது. அதேபோல் வங்காளம் என்பதும் பங்காளம் என்று மருவியுள்ளது. வற்றிலை என்பது பெட்ட்ல் என்று வங்காளத்தில் மருவியுள்ளது.


தமிழில் “வ” என்பது “ப” என்று வங்காளத்தில் மருவுகிறது. தமிழ் நாட்டிலிருந்து வங்காளம் சென்று குடியேறியவர்களால் மருவிய தமிழ் ங்காளத்தில் நடைமுறையானது. அங்கிருந்து வணிகம் செய்ய புறப்பட்ட வணிகர்கள் ஸ்பெயினை அடைந்தனர். அவர்களை பொனீசியர்கள் என்று அழைத்தனர். இதானால் இஸ் பொனீசியா என்று ஸ்பெயின் அக்காலத்தில் அழைக்கப்பட்டது. ஆகையினால் ஸ்பெயின் எனும் பெயரும் தமிழ் மற்றும் தமிழர்களால் உருவானதுதான்,


பொனீசியர்கள் காலில் பூசப்படும் மருதானி போன்ற சிவப்பு நிறத்தை தரும் ஒருவித குழம்பை விற்பனைக்காக எடுத்து சென்றனர். அக்குழம்பின் பெயர் செவ்வஞ்சி குழம்பு. அது பிற்காலத்தில் பொனீசிய திரவம் என்றும் அதன் நிறம் பொனீசிய நிறம் என்றும் மருவியது, பின்னாளில் உருவான கிரேக்க காவியத்தில் கூறப்பட்ட கற்பனை பறவையின் நிறம் பொனீசிய நிறத்தில் இருக்கும் என்று கூறி அப்பறவையை பொனீசிய பறவை என்று அழைத்தனர்.

அது பிற்காலத்தில் மருவி பீனிக்ஸ் என்றானது.



படியுங்கள் !!!  பகிருங்கள் !!!

No comments:

Post a Comment